Saturday, May 5, 2012

பாதைகள் தொலைந்த பெருவழி





புலரிக்கு
முந்தைய பொழுதில்
கசியும்
தேடலில் கலந்த
யுவனின் தவம்

வலிக்கத்
தொடங்கிவிட்டன
அகிலத்தின்
பால்கட்டிய
கொங்கைகள்

புதிய புனைவுகளை
யாசகம்
கேட்டுத் திரிகிறான்
கதைகளைத் தொலைத்த
நாடோடியோருவன்

                                சுரேன்





நாத்தீகாயணம்...



எப்படி

புரியவைப்பது

கடவுளுடன்

சண்டையிடப்

போவதில்லை!


எத்தனை முறை

சொல்வது

... பழித்தல்கள்

குறைக்கப்

படும்!


நம்பப்படாத

நம்பிக்கைகளைச்

சிதைத்து

மறுத்தல்களை

நிந்திக்கிறீர்கள்


புனித பாவங்களைக்

கழுவ

பிரார்திக்கும்படி

மன்றாடுகிறீர்கள்


செவிகளில் உரத்துக்

கேட்கிறது

கணவிலும்

சாத்தானென

சபிப்பது......

                 சுரேன்...............

Friday, May 4, 2012

புகைப்படக்காரன்





கணங்களை
உறைய வைக்கும்
வித்தைக்காரன்
மந்திரப் பேழையுடன்
வலம்வரும்
நாளின் முடிவில்
விசையினைச் சொடுக்கி
பொய்களைப் பிரிக்கும்
ஜாலம் செய்கிறான்
நிஜங்களைப் பிரதிபலிக்கும்
மாயச் சுருளினில்
புன்னகைகளின் போலியைச்
சிறைவைத்து
பசியடங்காப் பறவையாய்
நடு இரவினில்
பறந்து திரிகிறான்
முகங்களைத் தேடி......
                                  சுரேன்.
சோற்றுச் சித்தன்



சோமனாதன்

ஒடிசலான தேகக்காரன்

மழலையில்

விரல்சூப்பிக் கழித்தவன்

பதின்பருவங்களை

தொலைத்தான் பசியில்

இளமைக்கு உணவாய்

தேகம் கொடுத்தான்


உண்டி

கனவுகளின்

சாரமானது


அரிதாய்க் கிடைத்த

பழையதை முகர்ந்தவன்

நாசியைத் தின்றது

புழுத்தவாடை

வீசியதைத் தலையில்

ஏந்தியவன்

நையப்ப்புடைத்தான்

அந்த தசைப்பிண்டத்தை


ஓரிரவில்

அடித்தவன் ராசனானான்

பெற்றவன்

ஞானியானான்


அன்னமே

சோமனின் நிவேதனம்

தின்பதும் எறிவதும்

ஆசியானது


ஊணடி பெற்றோர்

புனிதரானர்

உண்பதனால்

தீர்ந்தது சாபம்

எறிந்ததைத் தந்தவர்

பாவிகளாயினர்


சோமனாதன்

ஆகிவிட்டான்

சோற்றுச் சித்தன்.......

                                 சுரேன்