Friday, May 4, 2012

சோற்றுச் சித்தன்



சோமனாதன்

ஒடிசலான தேகக்காரன்

மழலையில்

விரல்சூப்பிக் கழித்தவன்

பதின்பருவங்களை

தொலைத்தான் பசியில்

இளமைக்கு உணவாய்

தேகம் கொடுத்தான்


உண்டி

கனவுகளின்

சாரமானது


அரிதாய்க் கிடைத்த

பழையதை முகர்ந்தவன்

நாசியைத் தின்றது

புழுத்தவாடை

வீசியதைத் தலையில்

ஏந்தியவன்

நையப்ப்புடைத்தான்

அந்த தசைப்பிண்டத்தை


ஓரிரவில்

அடித்தவன் ராசனானான்

பெற்றவன்

ஞானியானான்


அன்னமே

சோமனின் நிவேதனம்

தின்பதும் எறிவதும்

ஆசியானது


ஊணடி பெற்றோர்

புனிதரானர்

உண்பதனால்

தீர்ந்தது சாபம்

எறிந்ததைத் தந்தவர்

பாவிகளாயினர்


சோமனாதன்

ஆகிவிட்டான்

சோற்றுச் சித்தன்.......

                                 சுரேன்


No comments:

Post a Comment