சோற்றுச் சித்தன்
சோமனாதன்
ஒடிசலான தேகக்காரன்
மழலையில்
விரல்சூப்பிக் கழித்தவன்
பதின்பருவங்களை
தொலைத்தான் பசியில்
இளமைக்கு உணவாய்
தேகம் கொடுத்தான்
உண்டி
கனவுகளின்
சாரமானது
அரிதாய்க் கிடைத்த
பழையதை முகர்ந்தவன்
நாசியைத் தின்றது
புழுத்தவாடை
வீசியதைத் தலையில்
ஏந்தியவன்
நையப்ப்புடைத்தான்
அந்த தசைப்பிண்டத்தை
ஓரிரவில்
அடித்தவன் ராசனானான்
பெற்றவன்
ஞானியானான்
அன்னமே
சோமனின் நிவேதனம்
தின்பதும் எறிவதும்
ஆசியானது
ஊணடி பெற்றோர்
புனிதரானர்
உண்பதனால்
தீர்ந்தது சாபம்
எறிந்ததைத் தந்தவர்
பாவிகளாயினர்
சோமனாதன்
ஆகிவிட்டான்
சோற்றுச் சித்தன்.......
சுரேன்
![]() |
ஒடிசலான தேகக்காரன்
மழலையில்
விரல்சூப்பிக் கழித்தவன்
பதின்பருவங்களை
தொலைத்தான் பசியில்
இளமைக்கு உணவாய்
தேகம் கொடுத்தான்
உண்டி
கனவுகளின்
சாரமானது
அரிதாய்க் கிடைத்த
பழையதை முகர்ந்தவன்
நாசியைத் தின்றது
புழுத்தவாடை
வீசியதைத் தலையில்
ஏந்தியவன்
நையப்ப்புடைத்தான்
அந்த தசைப்பிண்டத்தை
ஓரிரவில்
அடித்தவன் ராசனானான்
பெற்றவன்
ஞானியானான்
அன்னமே
சோமனின் நிவேதனம்
தின்பதும் எறிவதும்
ஆசியானது
ஊணடி பெற்றோர்
புனிதரானர்
உண்பதனால்
தீர்ந்தது சாபம்
எறிந்ததைத் தந்தவர்
பாவிகளாயினர்
சோமனாதன்
ஆகிவிட்டான்
சோற்றுச் சித்தன்.......
சுரேன்

No comments:
Post a Comment