Friday, May 4, 2012

புகைப்படக்காரன்





கணங்களை
உறைய வைக்கும்
வித்தைக்காரன்
மந்திரப் பேழையுடன்
வலம்வரும்
நாளின் முடிவில்
விசையினைச் சொடுக்கி
பொய்களைப் பிரிக்கும்
ஜாலம் செய்கிறான்
நிஜங்களைப் பிரதிபலிக்கும்
மாயச் சுருளினில்
புன்னகைகளின் போலியைச்
சிறைவைத்து
பசியடங்காப் பறவையாய்
நடு இரவினில்
பறந்து திரிகிறான்
முகங்களைத் தேடி......
                                  சுரேன்.

No comments:

Post a Comment