Saturday, May 5, 2012

பாதைகள் தொலைந்த பெருவழி





புலரிக்கு
முந்தைய பொழுதில்
கசியும்
தேடலில் கலந்த
யுவனின் தவம்

வலிக்கத்
தொடங்கிவிட்டன
அகிலத்தின்
பால்கட்டிய
கொங்கைகள்

புதிய புனைவுகளை
யாசகம்
கேட்டுத் திரிகிறான்
கதைகளைத் தொலைத்த
நாடோடியோருவன்

                                சுரேன்





1 comment: